என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேட்பாளர் பட்டியல்"
- கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது.
- வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் பெயர் வெளியிடப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் தெக்கலி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஜில்லா பரிஷத் உறுப்பினராக இருப்பவர் வாணி.
இவரது கணவர் ஸ்ரீநிவாஸ். இவர் ஏற்கனவே 2001-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் சேர்ந்தார். இதனையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜில்லா பரிஷ்த் துணைத் தலைவர் பதவிக்கு வாணி போட்டியிட்டார்.
இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தெக்கலி தோகுதியில் போட்டியிட இந்த தடவை வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது.
கடந்த மாதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் பெயர் வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாணி கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது கட்சி தலைமை மறுபரிசீலனை செய்து தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் இல்லை என்றால் ஏப்ரல் 22-ந் தேதி கணவருக்கு எதிராக சுயேட்சையாக மனு தாக்கல் செய்யப்படும் என வீடியோ வெளியிட்டு அறிவித்தார்.
இதனால் கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது.
கணவன் மனைவி இருவரும் தற்போது தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- மக்களவை தேர்தலை முன்னிட்டு 9 பேர் கொண்ட 10-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
- இதில் பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகரும் அடங்குவார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் 10-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 8 புதிய வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேற்கு வங்காளத்தின் அசன்சால் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிடுகிறார்.
சண்டிகர் தொகுதியில் சஞ்சய் சிங் போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேசம் காஜிபூர் தொகுதியில் பரஸ்நாத் ராய், மெய்ன்புரி தொகுதியில் ஜெய்வீர் சிங், கவுஷம்பி தொகுதியில் வினோத் சோன்கர், பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகர் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன
- அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.
தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், 1,085 வேட்பு மனுக்களில் 135 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் இறுதியாக போட்டியிடுகின்றனர். அதில், 874 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்கள் அடங்கும்.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி போடுகின்றனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது.
பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-
1. திருவள்ளூர் (தனி)-14
2. வடசென்னை-35
3. தென்சென்னை-41
4. மத்தியசென்னை-31
5. ஸ்ரீபெரும்புதூர்-31
6. காஞ்சிபுரம் (தனி)-11
7. அரக்கோணம்-26
8. வேலூர்-31
9. கிருஷ்ணகிரி-27
10. தர்மபுரி-24
11. திருவண்ணாமலை-31
12. ஆரணி-29
13. விழுப்புரம் (தனி)-17
14. கள்ளக்குறிச்சி-21
15. சேலம்-25
16. நாமக்கல்-40
17. ஈரோடு-31
18. திருப்பூர்-13
19. நீலகிரி (தனி)-16
20. கோவை-37
21. பொள்ளாச்சி-15
22. திண்டுக்கல்-15
23. கரூர்-54
24. திருச்சி-35
25. பெரம்பலூர்-23
26. கடலூர்-19
27. சிதம்பரம் (தனி)-14
28. மயிலாடுதுறை-17
29. நாகப்பட்டினம் (தனி)-9
30. தஞ்சாவூர்-12
31. சிவகங்கை-20
32. மதுரை-21
33. தேனி-25
34. விருதுநகர்-27
35. ராமநாதபுரம்-25
36. தூத்துக்குடி-28
37. தென்காசி (தனி)-15
38. திருநெல்வேலி-23
39. கன்னியாகுமரி-22
- பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
- வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.
வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-
1. திருவள்ளூர் (தனி)-14
2. வடசென்னை-49
3. தென்சென்னை-53
4. மத்தியசென்னை-32
5. ஸ்ரீபெரும்புதூர்-32
6. காஞ்சிபுரம் (தனி)-13
7. அரக்கோணம்-29
8. வேலூர்-37
9. கிருஷ்ணகிரி-34
10. தர்மபுரி-25
11. திருவண்ணாமலை-37
12. ஆரணி-32
13. விழுப்புரம் (தனி)-18
14. கள்ளக்குறிச்சி-21
15. சேலம்-27
16. நாமக்கல்-48
17. ஈரோடு-47
18. திருப்பூர்-16
19. நீலகிரி (தனி)-16
20. கோவை-41
21. பொள்ளாச்சி-18
22. திண்டுக்கல்-18
23. கரூர்-56
24. திருச்சி-38
25. பெரம்பலூர்-23
26. கடலூர்-19
27. சிதம்பரம் (தனி)-18
28. மயிலாடுதுறை-17
29. நாகப்பட்டினம் (தனி)-9
30. தஞ்சாவூர்-13
31. சிவகங்கை-21
32. மதுரை-21
33. தேனி-29
34. விருதுநகர்-27
35. ராமநாதபுரம்-27
36. தூத்துக்குடி-31
37. தென்காசி (தனி)-26
38. திருநெல்வேலி-26
39. கன்னியாகுமரி-27.
- 111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
- வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
இதில், இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இன்று பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்கொள்கிறார்.
ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் போட்டியிடுகிறார்.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராம ராவின் மகளும், அம்மாநில பாஜக தலைவருமான புரந்தேஷ்வரி, ஆந்திராவின் ராஜாமுந்திரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
- மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.
முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.
இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கோவையில் தனக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையை, 'IAM WAITING' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் வரவேற்றுள்ளார்.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டி.
- கிருஷ்ணகிரியில் நரசிம்மன் போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.
முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.
இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
- கள்ளக்குறிச்சி தொகுதியில் குமரகுரு போட்டி.
- ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் போட்டி.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள் தவிர மீதமுள்ள 32 பாராளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
ஸ்ரீபெரும்புதூர்- பிரேம்குமார்
தருமபுரி - அசோகன்
கள்ளக்குறிச்சி-குமரகுரு
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கோவை- ராமச்சந்திரன்
திருச்சி- கருப்பையா
பெரம்பலூர்- சந்திரமோகன்
பொள்ளாச்சி- கார்த்திகேயன்
திருப்பூர் - அருணாசலம்
நீலகிரி (தனி) - லோகேஷ்
மயிலாடுதுறை - பாபு
திருநெல்வேலி- சிம்லா முத்துசோழன்
சிவகங்கை -சேவியர் தாஸ்
தூத்துக்குடி- சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி- பசிலியா நசரேத்
புதுச்சேரி- தமிழ்வேந்தன்
விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் - ராணி
- வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
- 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.
இதனிடையே விருதுநகர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்து ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை. அதனால் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும்.
- ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மேலும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:- தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.
- தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டி.
- கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன் போட்டி.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்விவரம் வருமாறு
வடசென்னை- கலாநிதி வீராச்சாமி
தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்
மத்தியசென்னை- தயாநிதிமாறன்
ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம்- க.செல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
வேலூர்- கதிர்ஆனந்த்
தூத்துக்குடி- கனிமொழி
தேனி- தங்க தமிழ்ச்செல்வன்
நீலகிரி- ஆ.ராசா
கள்ளக்குறிச்சி- மலையரசன்
பெரம்பலூர்- அருண் நேரு
சேலம் - செல்வகணபதி
தஞ்சாவூர்- முரசொலி
தென்காசி- ராணி
பொள்ளாச்சி- கே.ஈஸ்வரசாமி
கோவை- கணபதி பி.ராஜ்குமார்
ஈரோடு- கே.இ.பிரகாஷ்
ஆரணி- தரணி வேந்தன்
திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை
தருமபுரி- அ.மணி
வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 21 பேரில் 3 பேர் பெண்கள், 19 பேர் பட்டதாரிகள் ஆவர்.
- அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
- புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ-க்கு 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொகுதி உடன்பாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் தொகுதி உடன்பாட்டிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதில் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்